1 கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும். நல்லோர் மடிந்துபோயினர். பூமியிலுள்ள ஜனங்களிடையே உண்மையான நம்பிக்கையுள்ளோர் எவருமில்லை.

2 அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.

3 பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார்.

4 அந்த ஜனங்கள், “நாங்கள் தக்க பொய்யுரைப்போம் எங்கள் நாக்குகளின் மூலமாக, நாங்கள் பெரியவர்களாவோம். யாரும் எங்கள் எஜமானராக இயலாது!” என்கிறார்கள்.

5 ஆனால் கர்த்தரோ, “தீயோர் ஏழைகளின் பொருள்களைத் திருடுவார்கள். உதவியற்ற ஜனங்களின் பொருள்களை அபகரிப்பார்கள். களைப்புற்றோரை இப்போது நான் எழுந்து பாதுகாப்பேன்” என்கிறார்.

6 கர்த்தருடைய சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் உருக்கப்பட்ட வெள்ளியைப்போல் அவை தூய்மையானவை. ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல் அவை தூய்மையானவை.

7 கர்த்தாவே, உதவியற்ற ஜனங்களைப் பாதுகாத்தருளும். இப்போதும் எப்போதும் அவர்களைப் பாதுகாப்பீராக.

8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை.