1 ⁽அல்லேலூயா! நெஞ்சார␢ ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துவேன்;␢ நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்␢ அவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾

2 ⁽ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;␢ அவற்றில் இன்பம் காண்போர்␢ அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.⁾

3 ⁽அவரது செயல்␢ மேன்மையும் மாண்பும் மிக்கது;␢ அவரது நீதி என்றென்றும்␢ நிலைத்துள்ளது.⁾

4 ⁽அவர் தம் வியத்தகு செயல்களை என்றும்␢ நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;␢ அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.⁾

5 ⁽அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு␢ உணவு அளிக்கின்றார்;␢ தமது உடன்படிக்கையை␢ என்றும் நினைவில் கொள்கின்றார்;⁾

6 ⁽வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்␢ தம் மக்களுக்கு அளித்தார்;␢ இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை␢ அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.⁾

7 ⁽அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள்␢ நம்பிக்கைக்குரியவை; நீதியானவை;␢ அவர்தம் கட்டளைகள் அனைத்தும்␢ நிலையானவை.⁾

8 ⁽என்றென்றும் எக்காலமும்␢ அவை நிலைமாறாதவை;␢ உண்மையாலும் நீதியாலும்␢ அவை உருவானவை.⁾

9 ⁽தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;␢ தம் உடன்படிக்கை␢ என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;␢ அவரது திருப்பெயர் தூயது;␢ அஞ்சுதற்கு உரியது.⁾

10 ⁽ஆண்டவர்பற்றிய அச்சமே␢ ஞானத்தின் தொடக்கம்;␢ அவர்தம் கட்டளைகளைக்␢ கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்;␢ அவரது புகழ்␢ என்றென்றும் நிலைத்துள்ளது.⁾

Psalm 111 ERV IRV TRV