1 கர்த்தரைத் துதியங்கள்! நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில் நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.

2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார். தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.

3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார். அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.

4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.

5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார். அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.

6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.

7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும். அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.

8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும். அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.

9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார். தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.

10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது. தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள். என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.

Psalm 111 ERV IRV TRV