யெசுவா, பானி கத்மியேல் செப்பனியா, புன்னி, செரெபியா பானி, கெனானி என்பவர்கள் லேவியருடையபடிகளின்மேல் நின்று தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.
அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.
எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.
அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.
அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.
ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.
அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.
அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.
| And testifiedst | וַתָּ֨עַד | wattāʿad | va-TA-ad |
| against them, that thou mightest bring them again | בָּהֶ֜ם | bāhem | ba-HEM |
| unto | לַֽהֲשִׁיבָ֣ם | lahăšîbām | la-huh-shee-VAHM |
| thy law: | אֶל | ʾel | el |
| yet they | תּֽוֹרָתֶ֗ךָ | tôrātekā | toh-ra-TEH-ha |
| dealt proudly, | וְהֵ֨מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
| and hearkened | הֵזִ֜ידוּ | hēzîdû | hay-ZEE-doo |
| not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| unto thy commandments, | שָׁמְע֤וּ | šomʿû | shome-OO |
| but sinned | לְמִצְוֹתֶ֙יךָ֙ | lĕmiṣwōtêkā | leh-mee-ts-oh-TAY-HA |
| against thy judgments, | וּבְמִשְׁפָּטֶ֣יךָ | ûbĕmišpāṭêkā | oo-veh-meesh-pa-TAY-ha |
| (which | חָֽטְאוּ | ḥāṭĕʾû | HA-teh-oo |
| if a man | בָ֔ם | bām | vahm |
| do, | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| he shall live | יַֽעֲשֶׂ֥ה | yaʿăśe | ya-uh-SEH |
| in them;) and withdrew | אָדָ֖ם | ʾādām | ah-DAHM |
| וְחָיָ֣ה | wĕḥāyâ | veh-ha-YA | |
| the shoulder, | בָהֶ֑ם | bāhem | va-HEM |
| and hardened | וַיִּתְּנ֤וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| their neck, | כָתֵף֙ | kātēp | ha-TAFE |
| and would not | סוֹרֶ֔רֶת | sôreret | soh-REH-ret |
| hear. | וְעָרְפָּ֥ם | wĕʿorpām | veh-ore-PAHM |
| הִקְשׁ֖וּ | hiqšû | heek-SHOO | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| שָׁמֵֽעוּ׃ | šāmēʿû | sha-may-OO |