ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.
அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.
மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.
| And Nehemiah, | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| which | נְחֶמְיָ֣ה | nĕḥemyâ | neh-hem-YA |
| is the Tirshatha, | ה֣וּא | hûʾ | hoo |
| and Ezra | הַתִּרְשָׁ֡תָא | hattiršātāʾ | ha-teer-SHA-ta |
| the priest | וְעֶזְרָ֣א | wĕʿezrāʾ | veh-ez-RA |
| the scribe, | הַכֹּהֵ֣ן׀ | hakkōhēn | ha-koh-HANE |
| and the Levites | הַסֹּפֵ֡ר | hassōpēr | ha-soh-FARE |
| that taught | וְהַלְוִיִּם֩ | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| הַמְּבִינִ֨ים | hammĕbînîm | ha-meh-vee-NEEM | |
| the people, | אֶת | ʾet | et |
| said | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| unto all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the people, | הָעָ֗ם | hāʿām | ha-AM |
| This | הַיּ֤וֹם | hayyôm | HA-yome |
| day | קָדֹֽשׁ | qādōš | ka-DOHSH |
| is holy | הוּא֙ | hûʾ | hoo |
| unto the Lord | לַֽיהוָ֣ה | layhwâ | lai-VA |
| your God; | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| mourn | אַל | ʾal | al |
| not, | תִּֽתְאַבְּל֖וּ | titĕʾabbĕlû | tee-teh-ah-beh-LOO |
| nor | וְאַל | wĕʾal | veh-AL |
| weep. | תִּבְכּ֑וּ | tibkû | teev-KOO |
| For | כִּ֤י | kî | kee |
| all | בוֹכִים֙ | bôkîm | voh-HEEM |
| the people | כָּל | kāl | kahl |
| wept, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| when they heard | כְּשָׁמְעָ֖ם | kĕšomʿām | keh-shome-AM |
| אֶת | ʾet | et | |
| the words | דִּבְרֵ֥י | dibrê | deev-RAY |
| of the law. | הַתּוֹרָֽה׃ | hattôrâ | ha-toh-RA |