ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.
அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.
| And all | וַיֵּֽלְכ֨וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| the people | כָל | kāl | hahl |
| went their way | הָעָ֜ם | hāʿām | ha-AM |
| to eat, | לֶֽאֱכֹ֤ל | leʾĕkōl | leh-ay-HOLE |
| and to drink, | וְלִשְׁתּוֹת֙ | wĕlištôt | veh-leesh-TOTE |
| and to send | וּלְשַׁלַּ֣ח | ûlĕšallaḥ | oo-leh-sha-LAHK |
| portions, | מָנ֔וֹת | mānôt | ma-NOTE |
| and to make | וְלַֽעֲשׂ֖וֹת | wĕlaʿăśôt | veh-la-uh-SOTE |
| great | שִׂמְחָ֣ה | śimḥâ | seem-HA |
| mirth, | גְדוֹלָ֑ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| because | כִּ֤י | kî | kee |
| they had understood | הֵבִ֙ינוּ֙ | hēbînû | hay-VEE-NOO |
| the words | בַּדְּבָרִ֔ים | baddĕbārîm | ba-deh-va-REEM |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| were declared | הוֹדִ֖יעוּ | hôdîʿû | hoh-DEE-oo |
| unto them. | לָהֶֽם׃ | lāhem | la-HEM |