நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:
அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும்.
அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.
எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.
அப்பொழுது நான் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும் வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.
எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.
நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.
நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.
| And I looked, | וָאֵ֣רֶא | wāʾēreʾ | va-A-reh |
| and rose up, | וָֽאָק֗וּם | wāʾāqûm | va-ah-KOOM |
| and said | וָֽאֹמַ֞ר | wāʾōmar | va-oh-MAHR |
| unto | אֶל | ʾel | el |
| the nobles, | הַֽחֹרִ֤ים | haḥōrîm | ha-hoh-REEM |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| the rulers, | הַסְּגָנִים֙ | hassĕgānîm | ha-seh-ɡa-NEEM |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| the rest | יֶ֣תֶר | yeter | YEH-ter |
| of the people, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| Be not | אַל | ʾal | al |
| ye afraid | תִּֽירְא֖וּ | tîrĕʾû | tee-reh-OO |
| of | מִפְּנֵיהֶ֑ם | mippĕnêhem | mee-peh-nay-HEM |
| them: remember | אֶת | ʾet | et |
| אֲדֹנָ֞י | ʾădōnāy | uh-doh-NAI | |
| the Lord, | הַגָּד֤וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| which is great | וְהַנּוֹרָא֙ | wĕhannôrāʾ | veh-ha-noh-RA |
| and terrible, | זְכֹ֔רוּ | zĕkōrû | zeh-HOH-roo |
| and fight | וְהִֽלָּחֲמ֗וּ | wĕhillāḥămû | veh-hee-la-huh-MOO |
| for | עַל | ʿal | al |
| your brethren, | אֲחֵיכֶם֙ | ʾăḥêkem | uh-hay-HEM |
| your sons, | בְּנֵיכֶ֣ם | bĕnêkem | beh-nay-HEM |
| and your daughters, | וּבְנֹֽתֵיכֶ֔ם | ûbĕnōtêkem | oo-veh-noh-tay-HEM |
| your wives, | נְשֵׁיכֶ֖ם | nĕšêkem | neh-shay-HEM |
| and your houses. | וּבָֽתֵּיכֶֽם׃ | ûbāttêkem | oo-VA-tay-HEM |