ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுΠξகிய அறிவும் Ϊுத்தியும் உள͠γவர்களெல்லாரும்,
நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.
| And that we should bring | וְאֶת | wĕʾet | veh-ET |
| the firstfruits | רֵאשִׁ֣ית | rēʾšît | ray-SHEET |
| of our dough, | עֲרִֽיסֹתֵ֣ינוּ | ʿărîsōtênû | uh-ree-soh-TAY-noo |
| and our offerings, | וּ֠תְרֽוּמֹתֵינוּ | ûtĕrûmōtênû | OO-teh-roo-moh-tay-noo |
| and the fruit | וּפְרִ֨י | ûpĕrî | oo-feh-REE |
| of all | כָל | kāl | hahl |
| manner of trees, | עֵ֜ץ | ʿēṣ | ayts |
| of wine | תִּיר֣וֹשׁ | tîrôš | tee-ROHSH |
| and of oil, | וְיִצְהָ֗ר | wĕyiṣhār | veh-yeets-HAHR |
| unto the priests, | נָבִ֤יא | nābîʾ | na-VEE |
| to | לַכֹּֽהֲנִים֙ | lakkōhănîm | la-koh-huh-NEEM |
| the chambers | אֶל | ʾel | el |
| of the house | לִשְׁכ֣וֹת | liškôt | leesh-HOTE |
| of our God; | בֵּית | bêt | bate |
| and the tithes | אֱלֹהֵ֔ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| of our ground | וּמַעְשַׂ֥ר | ûmaʿśar | oo-ma-SAHR |
| unto the Levites, | אַדְמָתֵ֖נוּ | ʾadmātēnû | ad-ma-TAY-noo |
| that the same | לַלְוִיִּ֑ם | lalwiyyim | lahl-vee-YEEM |
| Levites | וְהֵם֙ | wĕhēm | veh-HAME |
| might have the tithes | הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM |
| in all | הַֽמְעַשְּׂרִ֔ים | hamʿaśśĕrîm | hahm-ah-seh-REEM |
| the cities | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| of our tillage. | עָרֵ֥י | ʿārê | ah-RAY |
| עֲבֹֽדָתֵֽנוּ׃ | ʿăbōdātēnû | uh-VOH-da-TAY-noo |