Context verses Matthew 8:28
Matthew 8:1

அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.

αὐτῷ, αὐτῷ
Matthew 8:2

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.

αὐτῷ
Matthew 8:3

இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

τὴν
Matthew 8:4

இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

αὐτῷ, τὸ, εἰς
Matthew 8:5

இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:

εἰς, αὐτῷ
Matthew 8:7

அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

αὐτῷ
Matthew 8:8

நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

τὴν
Matthew 8:11

அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.

τῶν
Matthew 8:12

ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

τῆς, εἰς, τὸ, τὸ, τῶν
Matthew 8:14

இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.

Καὶ, εἰς, τὴν, τὴν
Matthew 8:15

அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

τῆς
Matthew 8:16

அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்:

αὐτῷ
Matthew 8:17

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

τὸ, διὰ
Matthew 8:18

பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் கண்டு, அக்கரைக்குப் போகக்கட்டளையிட்டார்.

εἰς, τὸ, πέραν
Matthew 8:19

அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

αὐτῷ
Matthew 8:20

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

αὐτῷ, τὴν
Matthew 8:21

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

τῶν, αὐτῷ
Matthew 8:22

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.

αὐτῷ
Matthew 8:23

அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.

Καὶ, αὐτῷ, εἰς, τὸ, αὐτῷ
Matthew 8:24

அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.

ὥστε, τὸ, τῶν
Matthew 8:27

அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.

αὐτῷ
Matthew 8:31

அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

εἰς, τὴν, τῶν
Matthew 8:32

அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின. அப்பொழுது பன்றிக் கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டு போயின.

εἰς, τὴν, τῶν, τῶν, εἰς, τὴν
Matthew 8:33

அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.

εἰς, τὴν, τῶν
Matthew 8:34

அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி வேண்டிக்கொண்டார்கள்.

εἰς, τῶν
And
Καὶkaikay
when
was
come
ἐλθόντιelthontiale-THONE-tee
he
αὐτῷautōaf-TOH
to
εἰςeisees
the
τὸtotoh
other
side
πέρανperanPAY-rahn
into
εἰςeisees
the
τὴνtēntane
country
χώρανchōranHOH-rahn
the
of
τῶνtōntone
Gergesenes,
Γεργεσηνῶν,gergesēnōngare-gay-say-NONE
there
met
ὑπήντησανhypēntēsanyoo-PANE-tay-sahn
him
αὐτῷautōaf-TOH
two
δύοdyoTHYOO-oh
devils,
with
possessed
δαιμονιζόμενοιdaimonizomenoithay-moh-nee-ZOH-may-noo
of

ἐκekake
the
tombs,
τῶνtōntone
out
μνημείωνmnēmeiōnm-nay-MEE-one
coming
ἐξερχόμενοιexerchomenoiayks-are-HOH-may-noo
fierce,
χαλεποὶchalepoiha-lay-POO
exceeding
λίανlianLEE-an
that
so
ὥστεhōsteOH-stay
no
μὴmay
might
ἰσχύεινischyeinee-SKYOO-een
man
τινὰtinatee-NA
pass
παρελθεῖνpareltheinpa-rale-THEEN
by
διὰdiathee-AH

τῆςtēstase
way.
ὁδοῦhodouoh-THOO
that
ἐκείνηςekeinēsake-EE-nase