அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.
கர்த்தர் ஆரோனை நோக்கி:
நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.
கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.
பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
| And Moses | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH |
| unto | אֶֽל | ʾel | el |
| Aaron, | אַהֲרֹ֡ן | ʾahărōn | ah-huh-RONE |
| and unto Eleazar | וּלְאֶלְעָזָר֩ | ûlĕʾelʿāzār | oo-leh-el-ah-ZAHR |
| and unto Ithamar, | וּלְאִֽיתָמָ֨ר׀ | ûlĕʾîtāmār | oo-leh-ee-ta-MAHR |
| his sons, | בָּנָ֜יו | bānāyw | ba-NAV |
| Uncover | רָֽאשֵׁיכֶ֥ם | rāʾšêkem | ra-shay-HEM |
| not | אַל | ʾal | al |
| your heads, | תִּפְרָ֣עוּ׀ | tiprāʿû | teef-RA-oo |
| neither | וּבִגְדֵיכֶ֤ם | ûbigdêkem | oo-veeɡ-day-HEM |
| rend | לֹֽא | lōʾ | loh |
| your clothes; | תִפְרֹ֙מוּ֙ | tiprōmû | teef-ROH-MOO |
| lest | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| ye die, | תָמֻ֔תוּ | tāmutû | ta-MOO-too |
| and lest wrath come | וְעַ֥ל | wĕʿal | veh-AL |
| upon | כָּל | kāl | kahl |
| all | הָֽעֵדָ֖ה | hāʿēdâ | ha-ay-DA |
| the people: | יִקְצֹ֑ף | yiqṣōp | yeek-TSOFE |
| but let your brethren, | וַֽאֲחֵיכֶם֙ | waʾăḥêkem | va-uh-hay-HEM |
| the whole | כָּל | kāl | kahl |
| house | בֵּ֣ית | bêt | bate |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| bewail | יִבְכּוּ֙ | yibkû | yeev-KOO |
| אֶת | ʾet | et | |
| the burning | הַשְּׂרֵפָ֔ה | haśśĕrēpâ | ha-seh-ray-FA |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| the Lord | שָׂרַ֥ף | śārap | sa-RAHF |
| hath kindled. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |