அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது; எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று; அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.
அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.
அப்பொழுது சேபாவும் சல்முனாவும்; நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக் காறைகளை எடுத்துக்கொண்டான்.
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.
பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
| And he came | וַיָּבֹא֙ | wayyābōʾ | va-ya-VOH |
| unto | אֶל | ʾel | el |
| the men | אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY |
| of Succoth, | סֻכּ֔וֹת | sukkôt | SOO-kote |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Behold | הִנֵּ֖ה | hinnē | hee-NAY |
| Zebah | זֶ֣בַח | zebaḥ | ZEH-vahk |
| and Zalmunna, | וְצַלְמֻנָּ֑ע | wĕṣalmunnāʿ | veh-tsahl-moo-NA |
| with whom | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| ye did upbraid | חֵֽרַפְתֶּ֨ם | ḥēraptem | hay-rahf-TEM |
| me, saying, | אוֹתִ֜י | ʾôtî | oh-TEE |
| Are the hands | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| of Zebah | הֲ֠כַף | hăkap | HUH-hahf |
| and Zalmunna | זֶ֣בַח | zebaḥ | ZEH-vahk |
| now | וְצַלְמֻנָּ֤ע | wĕṣalmunnāʿ | veh-tsahl-moo-NA |
| in thine hand, | עַתָּה֙ | ʿattāh | ah-TA |
| that | בְּיָדֶ֔ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha |
| we should give | כִּ֥י | kî | kee |
| bread | נִתֵּ֛ן | nittēn | nee-TANE |
| unto thy men | לַֽאֲנָשֶׁ֥יךָ | laʾănāšêkā | la-uh-na-SHAY-ha |
| that are weary? | הַיְּעֵפִ֖ים | hayyĕʿēpîm | ha-yeh-ay-FEEM |
| לָֽחֶם׃ | lāḥem | LA-hem |