கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.
யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.
அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து,
அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.
கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.
நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.
ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,
அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார்.
அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.
| And they forsook | וַיַּֽעַזְב֞וּ | wayyaʿazbû | va-ya-az-VOO |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֣ה׀ | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of their fathers, | אֲבוֹתָ֗ם | ʾăbôtām | uh-voh-TAHM |
| which brought them out | הַמּוֹצִ֣יא | hammôṣîʾ | ha-moh-TSEE |
| אוֹתָם֮ | ʾôtām | oh-TAHM | |
| of the land | מֵאֶ֣רֶץ | mēʾereṣ | may-EH-rets |
| of Egypt, | מִצְרַיִם֒ | miṣrayim | meets-ra-YEEM |
| and followed | וַיֵּֽלְכ֞וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| אַֽחֲרֵ֣י׀ | ʾaḥărê | ah-huh-RAY | |
| other | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| gods, | אֲחֵרִ֗ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| of the gods | מֵֽאֱלֹהֵ֤י | mēʾĕlōhê | may-ay-loh-HAY |
| of the people | הָֽעַמִּים֙ | hāʿammîm | ha-ah-MEEM |
| that | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| were round about | סְבִיב֣וֹתֵיהֶ֔ם | sĕbîbôtêhem | seh-vee-VOH-tay-HEM |
| them, and bowed themselves | וַיִּֽשְׁתַּחֲו֖וּ | wayyišĕttaḥăwû | va-yee-sheh-ta-huh-VOO |
| unto them, and provoked | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| וַיַּכְעִ֖סוּ | wayyakʿisû | va-yahk-EE-soo | |
| the Lord | אֶת | ʾet | et |
| to anger. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |