ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.
அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.
அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியா மட்டும் போவோம் என்று சொல்லி,
அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.
எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான்.
அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி,
அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.
விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.
அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்தகாரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.
| But the men | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| would | אָב֤וּ | ʾābû | ah-VOO |
| not | הָֽאֲנָשִׁים֙ | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| hearken | לִשְׁמֹ֣עַֽ | lišmōʿa | leesh-MOH-ah |
| to him: so the man | ל֔וֹ | lô | loh |
| took | וַיַּֽחֲזֵ֤ק | wayyaḥăzēq | va-ya-huh-ZAKE |
| his concubine, | הָאִישׁ֙ | hāʾîš | ha-EESH |
| and brought | בְּפִ֣ילַגְשׁ֔וֹ | bĕpîlagšô | beh-FEE-lahɡ-SHOH |
| her forth | וַיֹּצֵ֥א | wayyōṣēʾ | va-yoh-TSAY |
| unto | אֲלֵיהֶ֖ם | ʾălêhem | uh-lay-HEM |
| them; and they knew | הַח֑וּץ | haḥûṣ | ha-HOOTS |
| her, and abused | וַיֵּֽדְע֣וּ | wayyēdĕʿû | va-yay-deh-OO |
| her all | א֠וֹתָהּ | ʾôtoh | OH-toh |
| the night | וַיִּֽתְעַלְּלוּ | wayyitĕʿallĕlû | va-YEE-teh-ah-leh-loo |
| until | בָ֤הּ | bāh | va |
| the morning: | כָּל | kāl | kahl |
| and when the day | הַלַּ֙יְלָה֙ | hallaylāh | ha-LA-LA |
| began to spring, | עַד | ʿad | ad |
| they let her go. | הַבֹּ֔קֶר | habbōqer | ha-BOH-ker |
| וַֽיְשַׁלְּח֖וּהָ | wayšallĕḥûhā | va-sha-leh-HOO-ha | |
| בַּֽעֲל֥וֹת | baʿălôt | ba-uh-LOTE | |
| הַשָּֽׁחַר׃ | haššāḥar | ha-SHA-hahr |