நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என் மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு யுத்தம் பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர் சொன்னபடியினால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள்.
யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.
அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
| And he had | וַֽיְהִי | wayhî | VA-hee |
| forty | ל֞וֹ | lô | loh |
| sons | אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| thirty and | בָּנִ֗ים | bānîm | ba-NEEM |
| nephews, | וּשְׁלֹשִׁים֙ | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| that rode | בָנִ֔ים | bānîm | va-NEEM |
| on | רֹֽכְבִ֖ים | rōkĕbîm | roh-heh-VEEM |
| ten and threescore | עַל | ʿal | al |
| ass colts: | שִׁבְעִ֣ים | šibʿîm | sheev-EEM |
| judged he and | עֲיָרִ֑ם | ʿăyārim | uh-ya-REEM |
| וַיִּשְׁפֹּ֥ט | wayyišpōṭ | va-yeesh-POTE | |
| Israel | אֶת | ʾet | et |
| eight | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| years. | שְׁמֹנֶ֥ה | šĕmōne | sheh-moh-NEH |
| שָׁנִֽים׃ | šānîm | sha-NEEM |