எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின் மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.
ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டு சிதறிப்போனார்கள்.
பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.
சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கிப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான்.
ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.
தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.
நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.
| And it came to pass | וַיְהִי֩ | wayhiy | vai-HEE |
| in the ninth | בַשָּׁנָ֨ה | baššānâ | va-sha-NA |
| year | הַתְּשִׁעִ֜ית | hattĕšiʿît | ha-teh-shee-EET |
| of his reign, | לְמָלְכ֗וֹ | lĕmolkô | leh-mole-HOH |
| in the tenth | בַּחֹ֣דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh |
| month, | הָעֲשִׂירִי֮ | hāʿăśîriy | ha-uh-see-REE |
| in the tenth | בֶּעָשׂ֣וֹר | beʿāśôr | beh-ah-SORE |
| day of the month, | לַחֹדֶשׁ֒ | laḥōdeš | la-hoh-DESH |
| that Nebuchadrezzar | בָּ֠א | bāʾ | ba |
| king | נְבוּכַדְרֶאצַּ֨ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| of Babylon | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| came, | בָּבֶ֜ל | bābel | ba-VEL |
| he | ה֤וּא | hûʾ | hoo |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| his army, | חֵילוֹ֙ | ḥêlô | hay-LOH |
| against | עַל | ʿal | al |
| Jerusalem, | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
| and pitched | וַֽיַּחֲנ֖וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| against | עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| it, and built | וַיִּבְנ֥וּ | wayyibnû | va-yeev-NOO |
| forts | עָלֶ֛יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| against | דָּיֵ֖ק | dāyēq | da-YAKE |
| it round about. | סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |