பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.
சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.
கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம்போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.
பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?
அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.
| And when he | וַיְהִי | wayhî | vai-HEE |
| was | ה֞וּא | hûʾ | hoo |
| in the gate | בְּשַׁ֣עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| of Benjamin, | בִּנְיָמִ֗ן | binyāmin | been-ya-MEEN |
| a captain | וְשָׁם֙ | wĕšām | veh-SHAHM |
| of the ward | בַּ֣עַל | baʿal | BA-al |
| was there, | פְּקִדֻ֔ת | pĕqidut | peh-kee-DOOT |
| whose name | וּשְׁמוֹ֙ | ûšĕmô | oo-sheh-MOH |
| was Irijah, | יִרְאִיָּ֔יה | yirʾiyyāy | yeer-ee-YAI |
| the son | בֶּן | ben | ben |
| of Shelemiah, | שֶֽׁלֶמְיָ֖ה | šelemyâ | sheh-lem-YA |
| the son | בֶּן | ben | ben |
| of Hananiah; | חֲנַנְיָ֑ה | ḥănanyâ | huh-nahn-YA |
| and he took | וַיִּתְפֹּ֞שׂ | wayyitpōś | va-yeet-POSE |
| אֶֽת | ʾet | et | |
| Jeremiah | יִרְמְיָ֤הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo |
| the prophet, | הַנָּבִיא֙ | hannābîʾ | ha-na-VEE |
| saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Thou | אֶל | ʾel | el |
| fallest away | הַכַּשְׂדִּ֖ים | hakkaśdîm | ha-kahs-DEEM |
| to | אַתָּ֥ה | ʾattâ | ah-TA |
| the Chaldeans. | נֹפֵֽל׃ | nōpēl | noh-FALE |