இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.
சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.
நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.
நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.
ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.
என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
| Therefore | לָכֵן֮ | lākēn | la-HANE |
| thus | כֹּה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
| Ye | אַתֶּם֙ | ʾattem | ah-TEM |
| have not | לֹֽא | lōʾ | loh |
| hearkened | שְׁמַעְתֶּ֣ם | šĕmaʿtem | sheh-ma-TEM |
| unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| me, in proclaiming | לִקְרֹ֣א | liqrōʾ | leek-ROH |
| liberty, | דְר֔וֹר | dĕrôr | deh-RORE |
| every one | אִ֥ישׁ | ʾîš | eesh |
| to his brother, | לְאָחִ֖יו | lĕʾāḥîw | leh-ah-HEEOO |
| and every man | וְאִ֣ישׁ | wĕʾîš | veh-EESH |
| to his neighbour: | לְרֵעֵ֑הוּ | lĕrēʿēhû | leh-ray-A-hoo |
| behold, | הִנְנִ֣י | hinnî | heen-NEE |
| I proclaim | קֹרֵא֩ | qōrēʾ | koh-RAY |
| a liberty | לָכֶ֨ם | lākem | la-HEM |
| for you, saith | דְּר֜וֹר | dĕrôr | deh-RORE |
| the Lord, | נְאֻם | nĕʾum | neh-OOM |
| to | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| the sword, | אֶל | ʾel | el |
| to | הַחֶ֙רֶב֙ | haḥereb | ha-HEH-REV |
| the pestilence, | אֶל | ʾel | el |
| and to | הַדֶּ֣בֶר | haddeber | ha-DEH-ver |
| the famine; | וְאֶל | wĕʾel | veh-EL |
| and I will make | הָרָעָ֔ב | hārāʿāb | ha-ra-AV |
| you to be removed | וְנָתַתִּ֤י | wĕnātattî | veh-na-ta-TEE |
| into all | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| the kingdoms | לְזַוָ֔עֲה | lĕzawāʿă | leh-za-VA-uh |
| of the earth. | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| מַמְלְכ֥וֹת | mamlĕkôt | mahm-leh-HOTE | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |