இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.
நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும் சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?
அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
| And it shall be | וְהָ֣יְתָה | wĕhāyĕtâ | veh-HA-yeh-ta |
| to me a name | לִּ֗י | lî | lee |
| of joy, | לְשֵׁ֤ם | lĕšēm | leh-SHAME |
| a praise | שָׂשׂוֹן֙ | śāśôn | sa-SONE |
| and an honour | לִתְהִלָּ֣ה | lithillâ | leet-hee-LA |
| before all | וּלְתִפְאֶ֔רֶת | ûlĕtipʾeret | oo-leh-teef-EH-ret |
| the nations | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| of the earth, | גּוֹיֵ֣י | gôyê | ɡoh-YAY |
| which | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| shall hear | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| יִשְׁמְע֜וּ | yišmĕʿû | yeesh-meh-OO | |
| all | אֶת | ʾet | et |
| the good | כָּל | kāl | kahl |
| that | הַטּוֹבָ֗ה | haṭṭôbâ | ha-toh-VA |
| I | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| do unto | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
| them: and they shall fear | עֹשֶׂ֣ה | ʿōśe | oh-SEH |
| and tremble | אוֹתָ֔ם | ʾôtām | oh-TAHM |
| for | וּפָחֲד֣וּ | ûpāḥădû | oo-fa-huh-DOO |
| all | וְרָֽגְז֗וּ | wĕrāgĕzû | veh-ra-ɡeh-ZOO |
| the goodness | עַ֤ל | ʿal | al |
| and for | כָּל | kāl | kahl |
| all | הַטּוֹבָה֙ | haṭṭôbāh | ha-toh-VA |
| the prosperity | וְעַ֣ל | wĕʿal | veh-AL |
| that | כָּל | kāl | kahl |
| I | הַשָּׁל֔וֹם | haššālôm | ha-sha-LOME |
| procure | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| unto it. | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| עֹ֥שֶׂה | ʿōśe | OH-seh | |
| לָּֽהּ׃ | lāh | la |