இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:
இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.
நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
| The voice | ק֣וֹל | qôl | kole |
| of joy, | שָׂשׂ֞וֹן | śāśôn | sa-SONE |
| and the voice | וְק֣וֹל | wĕqôl | veh-KOLE |
| of gladness, | שִׂמְחָ֗ה | śimḥâ | seem-HA |
| the voice | ק֣וֹל | qôl | kole |
| of the bridegroom, | חָתָן֮ | ḥātān | ha-TAHN |
| and the voice | וְק֣וֹל | wĕqôl | veh-KOLE |
| of the bride, | כַּלָּה֒ | kallāh | ka-LA |
| the voice | ק֣וֹל | qôl | kole |
| of them that shall say, | אֹמְרִ֡ים | ʾōmĕrîm | oh-meh-REEM |
| Praise | הוֹדוּ֩ | hôdû | hoh-DOO |
| אֶת | ʾet | et | |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| of hosts: | צְבָא֜וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| for | כִּֽי | kî | kee |
| the Lord | ט֤וֹב | ṭôb | tove |
| is good; | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| for | כִּֽי | kî | kee |
| his mercy | לְעוֹלָ֣ם | lĕʿôlām | leh-oh-LAHM |
| endureth for ever: | חַסְדּ֔וֹ | ḥasdô | hahs-DOH |
| and of them that shall bring | מְבִאִ֥ים | mĕbiʾîm | meh-vee-EEM |
| the sacrifice of praise | תּוֹדָ֖ה | tôdâ | toh-DA |
| into the house | בֵּ֣ית | bêt | bate |
| of the Lord. | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| For | כִּֽי | kî | kee |
| I will cause to return | אָשִׁ֧יב | ʾāšîb | ah-SHEEV |
| אֶת | ʾet | et | |
| the captivity | שְׁבוּת | šĕbût | sheh-VOOT |
| of the land, | הָאָ֛רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| as at the first, | כְּבָרִאשֹׁנָ֖ה | kĕbāriʾšōnâ | keh-va-ree-shoh-NA |
| saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |