என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய தேரியாவின் மகனான பாரூக்கினிடத்தில் கொடுத்து,
ஏனெனில் இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.
அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.
இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| And they came in, | וַיָּבֹ֜אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| and possessed | וַיִּֽרְשׁ֣וּ | wayyirĕšû | va-yee-reh-SHOO |
| it; but they obeyed | אֹתָ֗הּ | ʾōtāh | oh-TA |
| not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| thy voice, | שָׁמְע֤וּ | šomʿû | shome-OO |
| neither | בְקוֹלֶ֙ךָ֙ | bĕqôlekā | veh-koh-LEH-HA |
| walked | וּבְתֹרָותְךָ֣ | ûbĕtōrowtkā | oo-veh-toh-rove-t-HA |
| in thy law; | לֹא | lōʾ | loh |
| they have done | הָלָ֔כוּ | hālākû | ha-LA-hoo |
| אֵת֩ | ʾēt | ate | |
| nothing | כָּל | kāl | kahl |
| of all | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| that | צִוִּ֧יתָה | ṣiwwîtâ | tsee-WEE-ta |
| thou commandedst | לָהֶ֛ם | lāhem | la-HEM |
| them to do: | לַעֲשׂ֖וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| therefore thou hast caused | לֹ֣א | lōʾ | loh |
| all | עָשׂ֑וּ | ʿāśû | ah-SOO |
| this | וַתַּקְרֵ֣א | wattaqrēʾ | va-tahk-RAY |
| evil | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
| to come upon | אֵ֥ת | ʾēt | ate |
| them: | כָּל | kāl | kahl |
| הָרָעָ֖ה | hārāʿâ | ha-ra-AH | |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |