நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
தேசத்திலே மூப்பானவர்களில் சிலர் எழும்பி சபையாகிய ஜனங்களை நோக்கி:
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
| But | אַ֣ךְ׀ | ʾak | ak |
| know | יָדֹ֣עַ | yādōaʿ | ya-DOH-ah |
| ye for certain, | תֵּדְע֗וּ | tēdĕʿû | tay-deh-OO |
| that | כִּ֣י | kî | kee |
| if | אִם | ʾim | eem |
| ye | מְמִתִ֣ים | mĕmitîm | meh-mee-TEEM |
| put me to death, | אַתֶּם֮ | ʾattem | ah-TEM |
| אֹתִי֒ | ʾōtiy | oh-TEE | |
| ye | כִּי | kî | kee |
| shall surely | דָ֣ם | dām | dahm |
| bring | נָקִ֗י | nāqî | na-KEE |
| innocent | אַתֶּם֙ | ʾattem | ah-TEM |
| blood | נֹתְנִ֣ים | nōtĕnîm | noh-teh-NEEM |
| upon | עֲלֵיכֶ֔ם | ʿălêkem | uh-lay-HEM |
| yourselves, and upon | וְאֶל | wĕʾel | veh-EL |
| this | הָעִ֥יר | hāʿîr | ha-EER |
| city, | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| and upon | וְאֶל | wĕʾel | veh-EL |
| the inhabitants | יֹשְׁבֶ֑יהָ | yōšĕbêhā | yoh-sheh-VAY-ha |
| thereof: for | כִּ֣י | kî | kee |
| of a truth | בֶאֱמֶ֗ת | beʾĕmet | veh-ay-MET |
| the Lord | שְׁלָחַ֤נִי | šĕlāḥanî | sheh-la-HA-nee |
| hath sent | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| me unto | עֲלֵיכֶ֔ם | ʿălêkem | uh-lay-HEM |
| you to speak | לְדַבֵּר֙ | lĕdabbēr | leh-da-BARE |
| בְּאָזְנֵיכֶ֔ם | bĕʾoznêkem | beh-oze-nay-HEM | |
| all | אֵ֥ת | ʾēt | ate |
| these | כָּל | kāl | kahl |
| words | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| in your ears. | הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |