கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.
அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன்.
உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.
| Then shalt thou say | וְאָמַרְתָּ֙ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֲלֵיהֶ֜ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, Thus | כֹּֽה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| Behold, | הִנְנִ֣י | hinnî | heen-NEE |
| I will fill | מְמַלֵּ֣א | mĕmallēʾ | meh-ma-LAY |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the inhabitants | יֹשְׁבֵ֣י | yōšĕbê | yoh-sheh-VAY |
| of this | הָאָ֪רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| land, | הַזֹּ֟את | hazzōt | ha-ZOTE |
| even the kings | וְאֶת | wĕʾet | veh-ET |
| that sit | הַמְּלָכִ֣ים | hammĕlākîm | ha-meh-la-HEEM |
| upon | הַיֹּשְׁבִים֩ | hayyōšĕbîm | ha-yoh-sheh-VEEM |
| David's | לְדָוִ֨ד | lĕdāwid | leh-da-VEED |
| throne, | עַל | ʿal | al |
| and the priests, | כִּסְא֜וֹ | kisʾô | kees-OH |
| and the prophets, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and all | הַכֹּהֲנִ֣ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| the inhabitants | וְאֶת | wĕʾet | veh-ET |
| of Jerusalem, | הַנְּבִיאִ֗ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM |
| with drunkenness. | וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE |
| כָּל | kāl | kahl | |
| יֹשְׁבֵ֥י | yōšĕbê | yoh-sheh-VAY | |
| יְרוּשָׁלִָ֖ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM | |
| שִׁכָּרֽוֹן׃ | šikkārôn | shee-ka-RONE |