கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள்.
நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?
நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவளை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல எனக்காயிற்று: அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன்.
என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள்.
அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள்.
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.
அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள்.
கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| Thus | כֹּ֣ה׀ | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| against | עַל | ʿal | al |
| all | כָּל | kāl | kahl |
| mine evil | שְׁכֵנַי֙ | šĕkēnay | sheh-hay-NA |
| neighbours, | הָֽרָעִ֔ים | hārāʿîm | ha-ra-EEM |
| that touch | הַנֹּֽגְעִים֙ | hannōgĕʿîm | ha-noh-ɡeh-EEM |
| the inheritance | בַּֽנַּחֲלָ֔ה | bannaḥălâ | ba-na-huh-LA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I have caused | הִנְחַ֥לְתִּי | hinḥaltî | heen-HAHL-tee |
| my people | אֶת | ʾet | et |
| עַמִּ֖י | ʿammî | ah-MEE | |
| Israel | אֶת | ʾet | et |
| to inherit; | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| Behold, | הִנְנִ֤י | hinnî | heen-NEE |
| I will pluck them out | נֹֽתְשָׁם֙ | nōtĕšām | noh-teh-SHAHM |
| of | מֵעַ֣ל | mēʿal | may-AL |
| their land, | אַדְמָתָ֔ם | ʾadmātām | ad-ma-TAHM |
| and pluck out | וְאֶת | wĕʾet | veh-ET |
| the house | בֵּ֥ית | bêt | bate |
| of Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| from among | אֶתּ֥וֹשׁ | ʾettôš | EH-tohsh |
| them. | מִתּוֹכָֽם׃ | mittôkām | mee-toh-HAHM |