பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்கிறார்.
| Sing, | רָנִּ֥י | ronnî | roh-NEE |
| O barren, | עֲקָרָ֖ה | ʿăqārâ | uh-ka-RA |
| thou that didst not | לֹ֣א | lōʾ | loh |
| bear; | יָלָ֑דָה | yālādâ | ya-LA-da |
| break forth | פִּצְחִ֨י | piṣḥî | peets-HEE |
| into singing, | רִנָּ֤ה | rinnâ | ree-NA |
| and cry aloud, | וְצַהֲלִי֙ | wĕṣahăliy | veh-tsa-huh-LEE |
| thou that didst not | לֹא | lōʾ | loh |
| travail with child: | חָ֔לָה | ḥālâ | HA-la |
| for | כִּֽי | kî | kee |
| more | רַבִּ֧ים | rabbîm | ra-BEEM |
| are the children | בְּֽנֵי | bĕnê | BEH-nay |
| of the desolate | שׁוֹמֵמָ֛ה | šômēmâ | shoh-may-MA |
| than the children | מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY |
| of the married wife, | בְעוּלָ֖ה | bĕʿûlâ | veh-oo-LA |
| saith | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |