யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.
ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,
அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.
பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
| And he told | וַיְסַפֵּ֣ר | waysappēr | vai-sa-PARE |
| it to | אֶל | ʾel | el |
| his father, | אָבִיו֮ | ʾābîw | ah-veeoo |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| his brethren: | אֶחָיו֒ | ʾeḥāyw | eh-hav |
| and his father | וַיִּגְעַר | wayyigʿar | va-yeeɡ-AR |
| rebuked | בּ֣וֹ | bô | boh |
| him, and said | אָבִ֔יו | ʾābîw | ah-VEEOO |
| unto him, What | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| is this | ל֔וֹ | lô | loh |
| dream | מָ֛ה | mâ | ma |
| that | הַֽחֲל֥וֹם | haḥălôm | ha-huh-LOME |
| thou hast dreamed? | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| Shall I | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| and thy mother | חָלָ֑מְתָּ | ḥālāmĕttā | ha-LA-meh-ta |
| and thy brethren | הֲב֣וֹא | hăbôʾ | huh-VOH |
| indeed | נָב֗וֹא | nābôʾ | na-VOH |
| come | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| to bow down ourselves | וְאִמְּךָ֣ | wĕʾimmĕkā | veh-ee-meh-HA |
| to thee to the earth? | וְאַחֶ֔יךָ | wĕʾaḥêkā | veh-ah-HAY-ha |
| לְהִשְׁתַּחֲוֹ֥ת | lĕhištaḥăwōt | leh-heesh-ta-huh-OTE | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| אָֽרְצָה׃ | ʾārĕṣâ | AH-reh-tsa |