ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து. தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான்.
ஆபிரகாமின் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the men | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
| of his house, | בֵיתוֹ֙ | bêtô | vay-TOH |
| born | יְלִ֣יד | yĕlîd | yeh-LEED |
| in the house, | בָּ֔יִת | bāyit | BA-yeet |
| and bought | וּמִקְנַת | ûmiqnat | oo-meek-NAHT |
| with money | כֶּ֖סֶף | kesep | KEH-sef |
| of the stranger, | מֵאֵ֣ת | mēʾēt | may-ATE |
| בֶּן | ben | ben | |
| were circumcised | נֵכָ֑ר | nēkār | nay-HAHR |
| with | נִמֹּ֖לוּ | nimmōlû | nee-MOH-loo |
| him. | אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |