ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.
சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.
சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.
செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
செரூகு முப்பது வயதானபோது; நாகோரைப் பெற்றான்.
நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
| And Terah | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | תֶּ֜רַח | teraḥ | TEH-rahk |
| אֶת | ʾet | et | |
| Abram | אַבְרָ֣ם | ʾabrām | av-RAHM |
| his son, | בְּנ֗וֹ | bĕnô | beh-NOH |
| and Lot | וְאֶת | wĕʾet | veh-ET |
| the son | ל֤וֹט | lôṭ | lote |
| of Haran | בֶּן | ben | ben |
| his son's | הָרָן֙ | hārān | ha-RAHN |
| son, | בֶּן | ben | ben |
| and Sarai | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| his daughter in law, | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| his son | שָׂרַ֣י | śāray | sa-RAI |
| Abram's | כַּלָּת֔וֹ | kallātô | ka-la-TOH |
| wife; | אֵ֖שֶׁת | ʾēšet | A-shet |
| and they went forth | אַבְרָ֣ם | ʾabrām | av-RAHM |
| with | בְּנ֑וֹ | bĕnô | beh-NOH |
| them from Ur | וַיֵּֽצְא֨וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| of the Chaldees, | אִתָּ֜ם | ʾittām | ee-TAHM |
| to go | מֵא֣וּר | mēʾûr | may-OOR |
| into the land | כַּשְׂדִּ֗ים | kaśdîm | kahs-DEEM |
| of Canaan; | לָלֶ֙כֶת֙ | lāleket | la-LEH-HET |
| and they came | אַ֣רְצָה | ʾarṣâ | AR-tsa |
| unto | כְּנַ֔עַן | kĕnaʿan | keh-NA-an |
| Haran, | וַיָּבֹ֥אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| and dwelt | עַד | ʿad | ad |
| there. | חָרָ֖ן | ḥārān | ha-RAHN |
| וַיֵּ֥שְׁבוּ | wayyēšĕbû | va-YAY-sheh-voo | |
| שָֽׁם׃ | šām | shahm |