ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:
நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும் லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.
ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,
பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.
உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.
பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.
பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.
பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன்தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.
உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்கரகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவனென்று எழுதியிருந்தது.
| And I, | וּ֠מִנִּי | ûminnî | OO-mee-nee |
| even I | אֲנָ֞ה | ʾănâ | uh-NA |
| Artaxerxes | אַרְתַּחְשַׁ֤סְתְּא | ʾartaḥšastĕʾ | ar-tahk-SHAHS-teh |
| the king, | מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA |
| do make | שִׂ֣ים | śîm | seem |
| a decree | טְעֵ֔ם | ṭĕʿēm | teh-AME |
| to all | לְכֹל֙ | lĕkōl | leh-HOLE |
| the treasurers | גִּזַּֽבְרַיָּ֔א | gizzabrayyāʾ | ɡee-zahv-ra-YA |
| which | דִּ֖י | dî | dee |
| are beyond | בַּֽעֲבַ֣ר | baʿăbar | ba-uh-VAHR |
| the river, | נַֽהֲרָ֑ה | nahărâ | na-huh-RA |
| that | דִּ֣י | dî | dee |
| whatsoever | כָל | kāl | hahl |
| דִּ֣י | dî | dee | |
| Ezra | יִ֠שְׁאֲלֶנְכוֹן | yišʾălenkôn | YEESH-uh-len-hone |
| the priest, | עֶזְרָ֨א | ʿezrāʾ | ez-RA |
| the scribe | כָהֲנָ֜ה | kāhănâ | ha-huh-NA |
| of the law | סָפַ֤ר | sāpar | sa-FAHR |
| of | דָּתָא֙ | dātāʾ | da-TA |
| the God | דִּֽי | dî | dee |
| of heaven, | אֱלָ֣הּ | ʾĕlāh | ay-LA |
| shall require | שְׁמַיָּ֔א | šĕmayyāʾ | sheh-ma-YA |
| of you, it be done | אָסְפַּ֖רְנָא | ʾosparnāʾ | ose-PAHR-na |
| speedily, | יִתְעֲבִֽד׃ | yitʿăbid | yeet-uh-VEED |