அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சு வரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக.
அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.
தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.
பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.
பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.
ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.
அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடிவந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக்கட்டி முடித்தார்கள்.
மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.
| And also | וְ֠אַף | wĕʾap | VEH-af |
| let the golden | מָאנֵ֣י | māʾnê | ma-NAY |
| and silver | בֵית | bêt | vate |
| vessels | אֱלָהָא֮ | ʾĕlāhāʾ | ay-la-HA |
| of the house | דִּ֣י | dî | dee |
| of God, | דַֽהֲבָ֣ה | dahăbâ | da-huh-VA |
| which | וְכַסְפָּא֒ | wĕkaspāʾ | veh-hahs-PA |
| Nebuchadnezzar | דִּ֣י | dî | dee |
| took forth | נְבֽוּכַדְנֶצַּ֗ר | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| out of | הַנְפֵּ֛ק | hanpēq | hahn-PAKE |
| the temple | מִן | min | meen |
| which | הֵֽיכְלָ֥א | hêkĕlāʾ | hay-heh-LA |
| is at Jerusalem, | דִֽי | dî | dee |
| and brought | בִירוּשְׁלֶ֖ם | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| unto Babylon, | וְהֵיבֵ֣ל | wĕhêbēl | veh-hay-VALE |
| be restored, | לְבָבֶ֑ל | lĕbābel | leh-va-VEL |
| and brought again | יַֽהֲתִיב֗וּן | yahătîbûn | ya-huh-tee-VOON |
| unto the temple | וִ֠יהָךְ | wîhok | VEE-hoke |
| which | לְהֵֽיכְלָ֤א | lĕhêkĕlāʾ | leh-hay-heh-LA |
| is at Jerusalem, | דִי | dî | dee |
| every one to his place, | בִירֽוּשְׁלֶם֙ | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| and place | לְאַתְרֵ֔הּ | lĕʾatrēh | leh-at-RAY |
| them in the house | וְתַחֵ֖ת | wĕtaḥēt | veh-ta-HATE |
| of God. | בְּבֵ֥ית | bĕbêt | beh-VATE |
| אֱלָהָֽא׃ | ʾĕlāhāʾ | ay-la-HA |