அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்தபொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது.
தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.
பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.
ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.
தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு,
| And they set | וַֽהֲקִ֨ימוּ | wahăqîmû | va-huh-KEE-moo |
| the priests | כָֽהֲנַיָּ֜א | kāhănayyāʾ | ha-huh-na-YA |
| in their divisions, | בִּפְלֻגָּֽתְה֗וֹן | bipluggātĕhôn | beef-loo-ɡa-teh-HONE |
| and the Levites | וְלֵֽוָיֵא֙ | wĕlēwāyēʾ | veh-lay-va-YAY |
| in their courses, | בְּמַחְלְקָ֣תְה֔וֹן | bĕmaḥlĕqātĕhôn | beh-mahk-leh-KA-teh-HONE |
| for | עַל | ʿal | al |
| the service | עֲבִידַ֥ת | ʿăbîdat | uh-vee-DAHT |
| of God, | אֱלָהָ֖א | ʾĕlāhāʾ | ay-la-HA |
| which | דִּ֣י | dî | dee |
| is at Jerusalem; | בִירֽוּשְׁלֶ֑ם | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| as it is written | כִּכְתָ֖ב | kiktāb | keek-TAHV |
| in the book | סְפַ֥ר | sĕpar | seh-FAHR |
| of Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |