அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப்போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
| The copy | פַּרְשֶׁ֣גֶן | paršegen | pahr-SHEH-ɡen |
| of the letter | אִ֠גַּרְתָּא | ʾiggartāʾ | EE-ɡahr-ta |
| that | דִּֽי | dî | dee |
| Tatnai, | שְׁלַ֞ח | šĕlaḥ | sheh-LAHK |
| governor | תַּתְּנַ֣י׀ | tattĕnay | ta-teh-NAI |
| on this side | פַּחַ֣ת | paḥat | pa-HAHT |
| the river, | עֲבַֽר | ʿăbar | uh-VAHR |
| and Shethar-boznai, | נַהֲרָ֗ה | nahărâ | na-huh-RA |
| and his companions | וּשְׁתַ֤ר | ûšĕtar | oo-sheh-TAHR |
| the Apharsachites, | בּֽוֹזְנַי֙ | bôzĕnay | boh-zeh-NA |
| which | וּכְנָ֣וָתֵ֔הּ | ûkĕnāwātēh | oo-heh-NA-va-TAY |
| were on this side | אֲפַ֨רְסְכָיֵ֔א | ʾăparsĕkāyēʾ | uh-FAHR-seh-ha-YAY |
| the river, | דִּ֖י | dî | dee |
| sent | בַּֽעֲבַ֣ר | baʿăbar | ba-uh-VAHR |
| unto | נַֽהֲרָ֑ה | nahărâ | na-huh-RA |
| Darius | עַל | ʿal | al |
| the king: | דָּֽרְיָ֖וֶשׁ | dārĕyāweš | da-reh-YA-vesh |
| מַלְכָּֽא׃ | malkāʾ | mahl-KA |