அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார் பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது:
நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப்போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
நேபுகாத்நேச்சார் எருசலேமிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து,
அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.
| Now | וּכְעַ֞ן | ûkĕʿan | oo-heh-AN |
| therefore, if | הֵ֧ן | hēn | hane |
| it seem good | עַל | ʿal | al |
| to | מַלְכָּ֣א | malkāʾ | mahl-KA |
| the king, | טָ֗ב | ṭāb | tahv |
| let there be search made | יִ֠תְבַּקַּר | yitbaqqar | YEET-ba-kahr |
| in the king's | בְּבֵ֨ית | bĕbêt | beh-VATE |
| treasure | גִּנְזַיָּ֜א | ginzayyāʾ | ɡeen-za-YA |
| house, | דִּֽי | dî | dee |
| which | מַלְכָּ֣א | malkāʾ | mahl-KA |
| is there | תַמָּה֮ | tammāh | ta-MA |
| at Babylon, | דִּ֣י | dî | dee |
| whether | בְּבָבֶל֒ | bĕbābel | beh-va-VEL |
| it be | הֵ֣ן | hēn | hane |
| so, that | אִיתַ֗י | ʾîtay | ee-TAI |
| a decree | דִּֽי | dî | dee |
| was made | מִן | min | meen |
| of | כּ֤וֹרֶשׁ | kôreš | KOH-resh |
| Cyrus | מַלְכָּא֙ | malkāʾ | mahl-KA |
| the king | שִׂ֣ים | śîm | seem |
| to build | טְעֵ֔ם | ṭĕʿēm | teh-AME |
| this | לְמִבְנֵ֛א | lĕmibnēʾ | leh-meev-NAY |
| house | בֵּית | bêt | bate |
| of God | אֱלָהָ֥א | ʾĕlāhāʾ | ay-la-HA |
| at Jerusalem, | דֵ֖ךְ | dēk | dake |
| and let the king | בִּירֽוּשְׁלֶ֑ם | bîrûšĕlem | bee-roo-sheh-LEM |
| send | וּרְע֥וּת | ûrĕʿût | oo-reh-OOT |
| his pleasure | מַלְכָּ֛א | malkāʾ | mahl-KA |
| to | עַל | ʿal | al |
| us concerning | דְּנָ֖ה | dĕnâ | deh-NA |
| this matter. | יִשְׁלַ֥ח | yišlaḥ | yeesh-LAHK |
| עֲלֶֽינָא׃ | ʿălênāʾ | uh-LAY-na |