அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம்.
அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக, நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம்.
எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே, கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
அவன் நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கிற தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார்.
அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப்போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.
இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்துபார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.
| And the vessels | וְ֠אַף | wĕʾap | VEH-af |
| also | מָֽאנַיָּ֣א | māʾnayyāʾ | ma-na-YA |
| of | דִֽי | dî | dee |
| gold | בֵית | bêt | vate |
| and silver | אֱלָהָא֮ | ʾĕlāhāʾ | ay-la-HA |
| of | דִּ֣י | dî | dee |
| the house | דַֽהֲבָ֣ה | dahăbâ | da-huh-VA |
| of God, | וְכַסְפָּא֒ | wĕkaspāʾ | veh-hahs-PA |
| which | דִּ֣י | dî | dee |
| Nebuchadnezzar | נְבֽוּכַדְנֶצַּ֗ר | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
| took | הַנְפֵּק֙ | hanpēq | hahn-PAKE |
| out of | מִן | min | meen |
| the temple | הֵֽיכְלָא֙ | hêkĕlāʾ | hay-heh-LA |
| that | דִּ֣י | dî | dee |
| was in Jerusalem, | בִֽירוּשְׁלֶ֔ם | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
| and brought | וְהֵיבֵ֣ל | wĕhêbēl | veh-hay-VALE |
| them | הִמּ֔וֹ | himmô | HEE-moh |
| into the temple | לְהֵֽיכְלָ֖א | lĕhêkĕlāʾ | leh-hay-heh-LA |
| of | דִּ֣י | dî | dee |
| Babylon, | בָבֶ֑ל | bābel | va-VEL |
| those | הַנְפֵּ֨ק | hanpēq | hahn-PAKE |
| did Cyrus | הִמּ֜וֹ | himmô | HEE-moh |
| the king | כּ֣וֹרֶשׁ | kôreš | KOH-resh |
| take | מַלְכָּ֗א | malkāʾ | mahl-KA |
| out of | מִן | min | meen |
| the temple | הֵֽיכְלָא֙ | hêkĕlāʾ | hay-heh-LA |
| of | דִּ֣י | dî | dee |
| Babylon, | בָבֶ֔ל | bābel | va-VEL |
| and they were delivered | וִיהִ֙יבוּ֙ | wîhîbû | vee-HEE-VOO |
| unto one, whose name | לְשֵׁשְׁבַּצַּ֣ר | lĕšēšĕbbaṣṣar | leh-shay-sheh-ba-TSAHR |
| was Sheshbazzar, | שְׁמֵ֔הּ | šĕmēh | sheh-MAY |
| whom | דִּ֥י | dî | dee |
| he had made | פֶחָ֖ה | peḥâ | feh-HA |
| governor; | שָׂמֵֽהּ׃ | śāmēh | sa-MAY |