அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.
அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரியபாஷையிலும் எழுதியிருந்தது.
ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்:
அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால்,
உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக்கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக.
இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம்.
உம்முடைய பிதாக்களின் நடபடிபுஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடிபுஸ்தகங்களில் கண்டறியலாம்.
அப்பொழுது ராஜா ஆலோசனைத்தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம்,
நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும்,
எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும் பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது.
இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான்.
| Now | אֱדַ֗יִן | ʾĕdayin | ay-DA-yeen |
| when | מִן | min | meen |
| דִּ֞י | dî | dee | |
| the copy | פַּרְשֶׁ֤גֶן | paršegen | pahr-SHEH-ɡen |
| of king | נִשְׁתְּוָנָא֙ | ništĕwānāʾ | neesh-teh-va-NA |
| Artaxerxes' | דִּ֚י | dî | dee |
| letter | אַרְתַּחְשַׁ֣שְׂתְּא | ʾartaḥšaśtĕʾ | ar-tahk-SHAHS-teh |
| was read | מַלְכָּ֔א | malkāʾ | mahl-KA |
| before | קֱרִ֧י | qĕrî | kay-REE |
| Rehum, | קֳדָם | qŏdām | koh-DAHM |
| and Shimshai | רְח֛וּם | rĕḥûm | reh-HOOM |
| the scribe, | וְשִׁמְשַׁ֥י | wĕšimšay | veh-sheem-SHAI |
| and their companions, | סָֽפְרָ֖א | sāpĕrāʾ | sa-feh-RA |
| they went up | וּכְנָוָֽתְה֑וֹן | ûkĕnāwātĕhôn | oo-heh-na-va-teh-HONE |
| in haste | אֲזַ֨לוּ | ʾăzalû | uh-ZA-loo |
| to Jerusalem | בִבְהִיל֤וּ | bibhîlû | veev-hee-LOO |
| unto | לִירֽוּשְׁלֶם֙ | lîrûšĕlem | lee-roo-sheh-LEM |
| the Jews, | עַל | ʿal | al |
| and made them | יְה֣וּדָיֵ֔א | yĕhûdāyēʾ | yeh-HOO-da-YAY |
| to cease | וּבַטִּ֥לוּ | ûbaṭṭilû | oo-va-TEE-loo |
| by force | הִמּ֖וֹ | himmô | HEE-moh |
| and power. | בְּאֶדְרָ֥ע | bĕʾedrāʿ | beh-ed-RA |
| וְחָֽיִל׃ | wĕḥāyil | veh-HA-yeel |