நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.
நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.
நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோலை விழுங்கிற்று.
காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிட வேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.
இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
கர்த்தர் நதியை அடித்து ஏழு நாளாயிற்று.
| And Moses | וַיַּֽעֲשׂוּ | wayyaʿăśû | va-YA-uh-soo |
| and Aaron | כֵן֩ | kēn | hane |
| did | מֹשֶׁ֨ה | mōše | moh-SHEH |
| so, | וְאַֽהֲרֹ֜ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
| as | כַּֽאֲשֶׁ֣ר׀ | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA |
| commanded; | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| and he lifted up | וַיָּ֤רֶם | wayyārem | va-YA-rem |
| the rod, | בַּמַּטֶּה֙ | bammaṭṭeh | ba-ma-TEH |
| and smote | וַיַּ֤ךְ | wayyak | va-YAHK |
| אֶת | ʾet | et | |
| the waters | הַמַּ֙יִם֙ | hammayim | ha-MA-YEEM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| were in the river, | בַּיְאֹ֔ר | bayʾōr | bai-ORE |
| in the sight | לְעֵינֵ֣י | lĕʿênê | leh-ay-NAY |
| of Pharaoh, | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
| and in the sight | וּלְעֵינֵ֖י | ûlĕʿênê | oo-leh-ay-NAY |
| of his servants; | עֲבָדָ֑יו | ʿăbādāyw | uh-va-DAV |
| and all | וַיֵּהָֽפְכ֛וּ | wayyēhāpĕkû | va-yay-ha-feh-HOO |
| the waters | כָּל | kāl | kahl |
| that | הַמַּ֥יִם | hammayim | ha-MA-yeem |
| were in the river | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were turned | בַּיְאֹ֖ר | bayʾōr | bai-ORE |
| to blood. | לְדָֽם׃ | lĕdām | leh-DAHM |