மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.
நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
| And they shall hearken | וְשָֽׁמְע֖וּ | wĕšāmĕʿû | veh-sha-meh-OO |
| to thy voice: | לְקֹלֶ֑ךָ | lĕqōlekā | leh-koh-LEH-ha |
| and thou shalt come, | וּבָאתָ֡ | ûbāʾtā | oo-va-TA |
| thou | אַתָּה֩ | ʾattāh | ah-TA |
| and the elders | וְזִקְנֵ֨י | wĕziqnê | veh-zeek-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto | אֶל | ʾel | el |
| the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Egypt, | מִצְרַ֗יִם | miṣrayim | meets-RA-yeem |
| and ye shall say | וַֽאֲמַרְתֶּ֤ם | waʾămartem | va-uh-mahr-TEM |
| unto | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| him, The Lord | יְהוָ֞ה | yĕhwâ | yeh-VA |
| God | אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY |
| of the Hebrews | הָֽעִבְרִיִּים֙ | hāʿibriyyîm | ha-eev-ree-YEEM |
| hath met | נִקְרָ֣ה | niqrâ | neek-RA |
| with | עָלֵ֔ינוּ | ʿālênû | ah-LAY-noo |
| us: and now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
| let us go, | נֵֽלֲכָה | nēlăkâ | NAY-luh-ha |
| we beseech thee, | נָּ֞א | nāʾ | na |
| three | דֶּ֣רֶךְ | derek | DEH-rek |
| days' | שְׁלֹ֤שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| journey | יָמִים֙ | yāmîm | ya-MEEM |
| into the wilderness, | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
| that we may sacrifice | וְנִזְבְּחָ֖ה | wĕnizbĕḥâ | veh-neez-beh-HA |
| to the Lord | לַֽיהוָ֥ה | layhwâ | lai-VA |
| our God. | אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |