பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
| And the people | וַיִּצְמָ֨א | wayyiṣmāʾ | va-yeets-MA |
| thirsted | שָׁ֤ם | šām | shahm |
| there | הָעָם֙ | hāʿām | ha-AM |
| for water; | לַמַּ֔יִם | lammayim | la-MA-yeem |
| and the people | וַיָּ֥לֶן | wayyālen | va-YA-len |
| murmured | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| against | עַל | ʿal | al |
| Moses, | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| and said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Wherefore | לָ֤מָּה | lāmmâ | LA-ma |
| is this | זֶּה֙ | zeh | zeh |
| that thou hast brought | הֶֽעֱלִיתָ֣נוּ | heʿĕlîtānû | heh-ay-lee-TA-noo |
| us up out of Egypt, | מִמִּצְרַ֔יִם | mimmiṣrayim | mee-meets-RA-yeem |
| to kill | לְהָמִ֥ית | lĕhāmît | leh-ha-MEET |
| us and our children | אֹתִ֛י | ʾōtî | oh-TEE |
| and our cattle | וְאֶת | wĕʾet | veh-ET |
| with thirst? | בָּנַ֥י | bānay | ba-NAI |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִקְנַ֖י | miqnay | meek-NAI | |
| בַּצָּמָֽא׃ | baṣṣāmāʾ | ba-tsa-MA |