நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே, பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.
இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.
பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.
பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.
நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,
தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.
| Though | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| a sinner | חֹטֶ֗א | ḥōṭeʾ | hoh-TEH |
| do | עֹשֶׂ֥ה | ʿōśe | oh-SEH |
| evil | רָ֛ע | rāʿ | ra |
| an hundred times, | מְאַ֖ת | mĕʾat | meh-AT |
| and his days be prolonged, | וּמַאֲרִ֣יךְ | ûmaʾărîk | oo-ma-uh-REEK |
| yet | ל֑וֹ | lô | loh |
| surely | כִּ֚י | kî | kee |
| I | גַּם | gam | ɡahm |
| know | יוֹדֵ֣עַ | yôdēaʿ | yoh-DAY-ah |
| that | אָ֔נִי | ʾānî | AH-nee |
| it shall be | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| well | יִהְיֶה | yihye | yee-YEH |
| with them that fear | טּוֹב֙ | ṭôb | tove |
| God, | לְיִרְאֵ֣י | lĕyirʾê | leh-yeer-A |
| which | הָאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| fear | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| before | יִֽירְא֖וּ | yîrĕʾû | yee-reh-OO |
| him: | מִלְּפָנָֽיו׃ | millĕpānāyw | mee-leh-fa-NAIV |