உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.
காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே.
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
| and | כִּ֣י | kî | kee |
| is | אִם | ʾim | eem |
| But if | שָׁנִ֥ים | šānîm | sha-NEEM |
| years, | הַרְבֵּ֛ה | harbē | hahr-BAY |
| many | יִחְיֶ֥ה | yiḥye | yeek-YEH |
| live | הָאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| man a | בְּכֻלָּ֣ם | bĕkullām | beh-hoo-LAHM |
| in them all; | יִשְׂמָ֑ח | yiśmāḥ | yees-MAHK |
| rejoice remember him let | וְיִזְכֹּר֙ | wĕyizkōr | veh-yeez-KORE |
| yet | אֶת | ʾet | et |
the | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| days of | הַחֹ֔שֶׁךְ | haḥōšek | ha-HOH-shek |
| darkness; | כִּֽי | kî | kee |
| for many. be | הַרְבֵּ֥ה | harbē | hahr-BAY |
| shall | יִהְי֖וּ | yihyû | yee-YOO |
| they | כָּל | kāl | kahl |
| All that | שֶׁבָּ֥א | šebbāʾ | sheh-BA |
| cometh vanity. | הָֽבֶל׃ | hābel | HA-vel |