இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
என் நேசர் நீர் தானையா
என்னை தேற்றிடும் எனதேசையா
சாரோனின் ராஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா ஐயா
…இயேசு ராஜா
உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் ஐயா
…இயேசு ராஜா
ஆபத்துக் காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர் ஐயா
…இயேசு ராஜா
பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்
…இயேசு ராஜா
Yesu Raajaa Aelai En Ullam Chords for Keyboard, Guitar and Piano