திருக்கரத்தால் தாங்கியென்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே – 2
உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
…திருக்கரத்தால்
ஆழ்கடலில் அலைகளினால்
அசையும் போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசுவுண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமுகம்
…திருக்கரத்தால்
அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கின்றேனே
இன்ப கானான் தேசமதை
…திருக்கரத்தால்
Thirukkaraththaal Thaangiyennai Chords for Keyboard, Guitar and Piano