தெய்வன்பின் வெள்ளமே
திருவருள் தோற்றமே
மெய்ம் மனதானந்தமே
செய்ய நின்செம்பாதம் சேவிக்க
இவ்வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்
மூர்க்கக்குணம் கோபம்
லோகம் சிற்றின்பமும்
மோக ஏக்கமானதைத்
தாக்கியான் தடுமாறித்
தயங்கிடும் வேளையில்
தற்பரா தற்காத்தருள்வாய்
…தெய்வன்பின்
சொந்தம் உனதல்லால்
சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்
புந்திக்கமலமாம் பமாலை கோர்த்து நின்
பொற்பதம் பிடித்துக்கொள்வேன்
…தெய்வன்பின்
பாவச்சேற்றில் பலவேளை பல மின்றப்
பாதையைத் தவறிடினும்
கூவி விளித்தும் தம்
மார்போடணைத்தன்பாய்
கோது பொருத்த நாதா
…தெய்வன்பின்
Theyvanpin Vellamae Thiruvarul Chords for Keyboard, Guitar and Piano