அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.
அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், சட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.
இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.
| Then Abraham | וַיִּגְוַ֨ע | wayyigwaʿ | va-yeeɡ-VA |
| gave up the ghost, | וַיָּ֧מָת | wayyāmot | va-YA-mote |
| and died | אַבְרָהָ֛ם | ʾabrāhām | av-ra-HAHM |
| in a good | בְּשֵׂיבָ֥ה | bĕśêbâ | beh-say-VA |
| old age, | טוֹבָ֖ה | ṭôbâ | toh-VA |
| an old man, | זָקֵ֣ן | zāqēn | za-KANE |
| and full | וְשָׂבֵ֑עַ | wĕśābēaʿ | veh-sa-VAY-ah |
| of years; and was gathered | וַיֵּאָ֖סֶף | wayyēʾāsep | va-yay-AH-sef |
| to | אֶל | ʾel | el |
| his people. | עַמָּֽיו׃ | ʿammāyw | ah-MAIV |