நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன்.
இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து,
நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன்.
உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.
நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர்.
உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியை தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி,
இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசிர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.
| And Abraham | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | אַבְרָהָ֜ם | ʾabrāhām | av-ra-HAHM |
| אֶת | ʾet | et | |
| Ishmael | יִשְׁמָעֵ֣אל | yišmāʿēl | yeesh-ma-ALE |
| his son, | בְּנ֗וֹ | bĕnô | beh-NOH |
| and all | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| that were born | כָּל | kāl | kahl |
| in his house, | יְלִידֵ֤י | yĕlîdê | yeh-lee-DAY |
| and all | בֵיתוֹ֙ | bêtô | vay-TOH |
| that were bought | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| with his money, | כָּל | kāl | kahl |
| every | מִקְנַ֣ת | miqnat | meek-NAHT |
| male | כַּסְפּ֔וֹ | kaspô | kahs-POH |
| among the men | כָּל | kāl | kahl |
| of Abraham's | זָכָ֕ר | zākār | za-HAHR |
| house; | בְּאַנְשֵׁ֖י | bĕʾanšê | beh-an-SHAY |
| and circumcised | בֵּ֣ית | bêt | bate |
| אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| the flesh | וַיָּ֜מָל | wayyāmol | va-YA-mole |
| of their foreskin | אֶת | ʾet | et |
| in the selfsame | בְּשַׂ֣ר | bĕśar | beh-SAHR |
| עָרְלָתָ֗ם | ʿorlātām | ore-la-TAHM | |
| day, | בְּעֶ֙צֶם֙ | bĕʿeṣem | beh-EH-TSEM |
| as | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| God | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| had said | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| unto | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| him. | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |