1 ⁽இளவேனில் காலத்தில் மழைக்காக␢ ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;␢ ஆண்டவரே␢ மின்னல்களை உண்டாக்குபவர்;␢ மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்;␢ வயல்வெளிகளில் பயிரினங்களை␢ முளைப்பிப்பவரும் அவரே;⁾

2 ⁽குலதெய்வங்கள்␢ வீணானதையே கூறுகின்றன;␢ குறிசொல்வோர்␢ பொய்க்காட்சி காண்கின்றனர்;␢ அவர்கள் போலிக் கனவுகளை␢ எடுத்துரைக்கின்றனர்;␢ வெறுமையான ஆறுதல் மொழிகளைச்␢ சொல்கின்றனர்;␢ ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல்␢ சிதறுண்டு அலைந்தனர்;␢ ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.⁾

3 ⁽ஆயர்களுக்கு எதிராக␢ என் கோபம் பற்றியெரிகின்றது;␢ தலைவர்களை நான்␢ தண்டிக்கப் போகின்றேன்;␢ ஏனெனில், படைகளின் ஆண்டவர்␢ தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக்␢ கண்காணிக்கிறார்;␢ அவர்களை, வலிமைமிகு␢ போர்க் குதிரைகளைப்போல் ஆக்குவார்.⁾

4 ⁽அவர்களிடமிருந்தே␢ மூலைக் கல் தோன்றும்;␢ கூடார முளையும், போர்வில்லும்,␢ ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே␢ அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.⁾

5 ⁽அவர்கள், ஆற்றல்மிக்க␢ போர்வீரர்களைப்போல்,␢ பகைவரைச் சேற்றில் தள்ளி␢ மிதிப்பார்கள்.⁾

6 ⁽“யூதா குடும்பத்தை␢ ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்;␢ யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்;␢ அவர்கள்மீது␢ இரக்கம் கொண்டுள்ளதால்␢ அவர்களை நான்␢ திரும்பி வரச்செய்வேன்;␢ அவர்கள் என்னால்␢ தள்ளிவிடப்படாதவர்களைப் போல்␢ இருப்பார்கள்;␢ ஏனெனில், நானே அவர்களுடைய␢ கடவுளாகிய ஆண்டவர்;␢ நான் அவர்களின் மன்றாட்டுக்கு␢ மறுமொழி அளிப்பேன்.⁾

7 ⁽எப்ராயிம் மக்கள்␢ ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்;␢ திராட்சை மது அருந்தியவரின்␢ உள்ளத்தைப்போல்␢ அவர்கள் உள்ளம் களிப்படையும்;␢ அவர்கள் பிள்ளைகளும்␢ அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்;␢ ஆண்டவரில் அவர்கள் இதயம்␢ மகிழ்ந்து களிப்புறும்.⁾

8 ⁽சீழ்க்கை ஒலி எழுப்பி␢ நான் அவர்களைச்␢ சேர்த்துக் கொள்வேன்;␢ ஏனெனில் நானே அவர்களை␢ மீட்டருள்வேன்;␢ முன்போலவே அவர்கள்␢ பல்கிப் பெருகுவார்கள்.⁾

9 ⁽மக்களினங்களிடையே␢ நான் அவர்களைச் சிதறடித்தாலும்,␢ தொலை நாடுகளில்␢ என்னை அவர்கள்␢ நினைத்துக் கொள்வார்கள்;␢ தங்கள் மக்களோடு வாழ்ந்து␢ திரும்பி வருவார்கள்.⁾

10 ⁽நான் அவர்களை எகிப்து நாட்டினின்று␢ திரும்பிவரச் செய்வேன்;␢ அசீரியாவிலிருந்து அவர்களைக்␢ கூட்டிக்கொண்டு வருவேன்;␢ கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு␢ அவர்களைக் கொண்டு வருவேன்;␢ இடம் இல்லாமல் போகுமட்டும்␢ வந்து சேருவார்கள்.⁾

11 ⁽எகிப்தியக் கடலை அவர்கள்␢ கடந்து செல்வார்கள்;␢ கடல் அலைகள்␢ அடித்து நொறுக்கப்படும்;␢ பேராற்றின் ஆழங்களெல்லாம்␢ வறண்டுபோகும்;␢ அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்;␢ எகிப்து நாட்டின் செங்கோல்␢ அகற்றப்படும்.⁾

12 ⁽ஆண்டவருக்குள் அவர்களை␢ ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்;␢ ஆண்டவரின் பெயரில்␢ அவர்கள் பெருமைகொள்வார்கள்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Zechariah 10 ERV IRV TRV