1 ⁽கடவுளே! மௌனமாய் இராதேயும்;␢ பேசாமல் இராதேயும்;␢ இறைவனே! அமைதியாய் இராதேயும்.⁾

2 ⁽ஏனெனில், உம் எதிரிகள்␢ அமளி செய்கின்றார்கள்;␢ உம்மை வெறுப்போர்␢ தலைதூக்குகின்றார்கள்.⁾

3 ⁽உம் மக்களுக்கு எதிராக␢ வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்;␢ உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச்␢ சூழ்ச்சி செய்கின்றார்கள்.⁾

4 ⁽அவர்கள் கூறுகின்றார்கள்;␢ ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு␢ ஒழித்திடுவோம்;␢ இஸ்ரயேலின் பெயரை␢ எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’⁾

5 ⁽அவர்கள் ஒருமனப்பட்டுச்␢ சதி செய்கின்றார்கள்;␢ உமக்கு எதிராக␢ உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.⁾

6 ⁽ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர்,␢ மோவாபியர், அக்ரியர்,⁾

7 ⁽கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர்,␢ பெலிஸ்தியர் மற்றும்␢ தீர்வாழ் மக்களே அவர்கள்.⁾

8 ⁽அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு,␢ லோத்தின் மைந்தருக்கு␢ வலக்கையாய் இருந்தனர். (சேலா)⁾

9 ₍மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே␢ சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல,␢ அவர்களுக்கும் செய்தருளும்.₎

10 ⁽அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்;␢ அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள்.⁾

11 ⁽ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல்␢ அவர்களின் உயர்குடி மக்களுக்கும்␢ செய்தருளும்! § செபாருக்கும் சல்முன்னாவுக்கும்␢ செய்ததுபோல் அவர்களின்␢ தலைவர்களுக்கும் செய்தருளும்.⁾

12 ⁽ஏனெனில், ‛கட‌வுளின் மேய்ச்சல் நிலத்தை␢ நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்’␢ என்று அவர்கள் கூறினார்கள்.⁾

13 ⁽என் கடவுளே! சூறாவளியில் புழுதியென,␢ காற்றில் பதரென␢ அவர்களை ஆக்கியருளும்.⁾

14 ⁽நெருப்பு காட்டை எரிப்பது போலவும்,␢ தீக்கனல் மலைகளைச்␢ சுட்டெரிப்பது போலவும்␢ அவர்களுக்குச் செய்தருளும்.⁾

15 ⁽உமது புயலால்␢ அவர்களைத் துரத்திவிடும்!␢ உமது சூறாவளியால்␢ அவர்களைத் திகிலடையச் செய்யும்.⁾

16 ⁽ஆண்டவரே, மானக்கேட்டினால்␢ அவர்கள் முகத்தை மூடும்;␢ அப்பொழுதுதான் அவர்கள்␢ உமது பெயரை நாடுவார்கள்.⁾

17 ⁽அவர்கள் என்றென்றும்␢ வெட்கிக் கலங்குவார்களாக!␢ நாணமுற்று அழிந்து போவார்களாக!⁾

18 ⁽‛ஆண்டவர்’ என்னும்␢ பெயர் தாங்கும் உம்மை,␢ உலகனைத்திலும் உன்னதரான உம்மை,␢ அவர்கள் அறிந்து கொள்வார்களாக!⁾

Psalm 83 ERV IRV TRV