1 ⁽ஆண்டவரே! உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ ஒருபோதும் நான் வெட்கமுற␢ விடாதேயும்.⁾

2 ⁽உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;␢ எனக்கு நீர் செவிசாய்த்து␢ என்னை மீட்டுக் கொள்ளும்.⁾

3 ⁽என் அடைக்கலப் பாறையாக␢ நீர் இருந்தருளும்;␢ கோட்டை அரணாயிருந்து␢ என்னை மீட்டருளும்;␢ ஏனெனில், நீர் எனக்குக்␢ கற்பாறையாகவும்␢ அரணாகவும் இருக்கின்றீர்.⁾

4 ⁽என் கடவுளே, பொல்லார் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்␢ பிடியினின்று என்னைக் காத்தருளும்.⁾

5 ⁽என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;␢ ஆண்டவரே, இளமைமுதல்␢ நீரே என் நம்பிக்கை.⁾

6 ⁽பிறப்பிலிருந்து நான் உம்மைச்␢ சார்ந்துள்ளேன்;␢ தாய் வயிற்றிலிருந்து␢ நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;␢ உம்மையே நான் எப்போதும்␢ புகழ்ந்து போற்றுவேன்.⁾

7 ⁽பலருக்கு நான்␢ ஒரு புதிராய்க் காணப்படுகின்றேன்;␢ நீரே எனக்கு உறுதியான அடைக்கலம்.⁾

8 ⁽என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே;␢ நாளெல்லாம் நான் பேசுவது␢ உமது பெருமையே.⁾

9 ⁽முதிர் வயதில்␢ என்னைத் தள்ளிவிடாதேயும்;␢ என் ஆற்றல் குன்றும் நாளில்␢ என்னைக் கைவிடாதேயும்.⁾

10 ⁽ஏனெனில், என் எதிரிகள்␢ பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே;␢ என் உயிரைப் பறிக்கத் தேடுவோர்␢ ஒன்றுகூடிச் சதி செய்கின்றனர்;⁾

11 ⁽“கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்;␢ அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;␢ அவனைக் காப்பாற்ற␢ ஒருவருமில்லை” என்று அவர்கள் சொல்கின்றார்கள்.⁾

12 ⁽கடவுளே! என்னைவிட்டுத்␢ தொலைவில் போய்விடாதேயும்;␢ என் கடவுளே! எனக்குத் துணை செய்ய␢ விரைந்து வாரும்.⁾

13 ⁽என்னைப் பழிப்பவர்கள்␢ வெட்கி அழிவார்களாக!␢ எனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவர்களை␢ இழிவும் மானக்கேடும் சூழட்டும்!⁾

14 ⁽ஆனால், நான்␢ என்றும் நம்பிக்கையோடு இருப்பேன்;␢ மேலும் மேலும் உம்மைப்␢ புகழ்ந்து கொண்டிருப்பேன்.⁾

15 ⁽என் வாய் நாள்தோறும்␢ உமது நீதியையும் நீர் அருளும்␢ மீட்பையும் எடுத்துரைக்கும்;␢ உம் அருட் செயல்களை␢ என்னால் கணிக்க இயலாது.⁾

16 ⁽தலைவராகிய ஆண்டவரே!␢ உமது வலிமைமிகு செயல்களை␢ எடுத்துரைப்பேன்;␢ உமக்கே உரிய நீதிமுறைமையைப்␢ புகழ்ந்துரைப்பேன்.⁾

17 ⁽கடவுளே, என் இளமைமுதல்␢ எனக்குக் கற்பித்து வந்தீர்;␢ இனிவரும் நாள்களிலும்␢ உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.⁾

18 ⁽கடவுளே, உம் கைவன்மையையும்␢ ஆற்றலையும்␢ இனிவரும் தலைமுறைக்கு␢ நான் அறிவிக்குமாறு␢ வயது முதிர்ந்த, முடி நரைத்துவிட்ட␢ என்னைக் கைவிடாதேயும்.⁾

19 ⁽கடவுளே, உமது நீதி␢ வானம் வரைக்கும் எட்டுகின்றது;␢ மாபெரும் செயல்களை␢ நீர் செய்திருக்கிறீர்;␢ கடவுளே, உமக்கு நிகர் யார்?⁾

20 ⁽இன்னல்கள் பலவற்றையும்␢ தீங்குகளையும்␢ நான் காணுமாறு செய்த நீரே,␢ எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்;␢ பாதாளத்தினின்று என்னைத்␢ தூக்கி விடுவீர்.⁾

21 ⁽என் மேன்மையைப் பெருகச் செய்து␢ மீண்டும் என்னைத் தேற்றுவீர்.⁾

22 ⁽என் கடவுளே, நான்␢ வீணையைக் கொண்டு உம்மையும்␢ உமது உண்மையையும் புகழ்வேன்;␢ இஸ்ரயேலின் தூயரே, யாழிசைத்து␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾

23 ⁽நான் உமக்குப் புகழ்பாடுகையில்␢ என் நா அக்களிக்கும்;␢ நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும்␢ அக்களிக்கும்.⁾

24 ⁽என் வாழ்நாளெல்லாம் என் நா␢ உமது நீதியை எடுத்துரைக்கும்.␢ ஏனெனில் எனக்குத்␢ தீங்குசெய்யப் பார்த்தவர்கள்␢ வெட்கமும் மானக்கேடும்␢ அடைந்து விட்டார்கள்.⁾

Psalm 71 ERV IRV TRV