1 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!

2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும்.

3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.

4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர்.

5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.

6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.

7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.

Psalm 67 ERV IRV TRV