1 ⁽கடவுளின் செயலுக்காக நான்␢ மௌனமாய்க் காத்திருக்கின்றேன்;␢ எனக்கு மீட்பு கிடைப்பது␢ அவரிடமிருந்தே;⁾

2 ⁽உண்மையாகவே என் கற்பாறையும்␢ மீட்பும் அவரே;␢ என் கோட்டையும் அவரே;␢ எனவே நான் சிறிதும் அசைவுறேன்.⁾

3 ⁽ஒருவரைக் கொல்லவேண்டுமென்று␢ நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம்␢ வெறியுடன் தாக்குவீர்?␢ நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும்␢ சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர்.⁾

4 ⁽அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து␢ அவரைத் தள்ளிவிடத்␢ திட்டமிடுகின்றனர்;␢ பொய் சொல்வதில்␢ இன்பம் காண்கின்றனர்;␢ அவர்களது வாயில் ஆசிமொழி;␢ அவர்களது உள்ளத்திலோ␢ சாபமொழி. (சேலா)⁾

5 ⁽நெஞ்சே, கடவுளுக்காக␢ மௌனமாய்க் காத்திரு;␢ ஏனெனில், நான் எதிர்பார்க்கும்␢ நலன் வருவது அவரிடமிருந்தே;⁾

6 ⁽உண்மையாகவே,␢ என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே.␢ எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.⁾

7 ⁽என் மீட்பும் மேன்மையும்␢ கடவுளிடமே இருக்கின்றன;␢ என் வலிமைமிகு கற்பாறையும்␢ புகலிடமும் கடவுளே.⁾

8 ⁽மக்களே! எக்காலத்திலும்␢ அவரையே நம்புங்கள்;␢ அவர் முன்னிலையில்␢ உங்கள் உள்ளத்தில் உள்ளதைத்␢ திறந்து கொட்டுங்கள்;␢ கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா)⁾

9 ⁽மெய்யாகவே, மானிடர்␢ நீர்க்குமிழி போன்றவர்;␢ மனிதர் வெறும் மாயை;␢ துலாவில் வைத்து நிறுத்தால்,␢ அவர்கள் மேலே போகின்றார்கள்;␢ எல்லாரையும் சேர்த்தாலும்␢ நீர்க்குமிழியை விட␢ எடை குறைகின்றார்கள்.⁾

10 ⁽பிறரைக் கசக்கிப் பிழிவதில்␢ நம்பிக்கை வைக்காதீர்;␢ கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்;␢ செல்வம் பெருகும்போது,␢ உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர்.⁾

11 ⁽‛ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று␢ அவர் ஒருமுறை மொழிய,␢ நான் இருமுறை கேட்டேன்.⁾

12 ⁽‛என் தலைவரே!␢ உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!’␢ ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும்␢ அவர்தம் செயல்களுக்குத் தக்க␢ கைம்மாறு நீரே அளிக்கின்றீர்.⁾

Psalm 62 ERV IRV TRV