1 ⁽ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு␢ உண்மையில் நீதியானதா?␢ மாந்தர்க்கு நேர்மையுடன்␢ தீர்ப்பு வழங்குகின்றீரா?⁾

2 ⁽இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே␢ நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்;␢ நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு␢ உடந்தையாய் இருக்கின்றீர்கள்.⁾

3 ⁽பொல்லார் கருவிலிருந்தே␢ நெறிதவறிச் செல்கின்றனர்;␢ பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.⁾

4 ⁽அவர்களது நச்சுத்தன்மை␢ நாகத்தின் நஞ்சு போன்றது;␢ செவிட்டு விரியன் தன் காதை␢ அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச்␢ செவிடாக்கிக் கொள்கின்றனர்.⁾

5 ⁽பாம்பாட்டியின் மகுடியோசை␢ அவ்விரியனின் காதில் விழாது;␢ அவன் திறமையுடன் ஊதினாலும்␢ அதற்குக் கேளாது.⁾

6 ⁽கடவுளே, அவர்கள் வாயின் பற்களை␢ நொறுக்கிவிடும்;␢ ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின்␢ கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.⁾

7 ⁽காட்டாற்று நீர்போல␢ அவர்கள் மறைந்தொழியட்டும்;␢ அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன்␢ அம்புகள் முறிந்து போகட்டும்!⁾

8 ⁽ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும்␢ நத்தைபோல் ஆகட்டும்;␢ பிறந்தும் கதிரொளி காணாத␢ பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.⁾

9 ⁽முள் நெருப்பினால்␢ உங்கள் பானை சூடேறுமுன்னே,␢ பச்சையானதையும்␢ வெந்துகொண்டிருப்பதையும்␢ சுழற்காற்றினால் அவர்␢ அடித்துக்கொண்டு போவார்.⁾

10 ⁽தீயோர் தண்டிக்கப்படுவதை␢ நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்;␢ அவர்கள் தம் பாதங்களைப்␢ பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.⁾

11 ⁽அப்போது மானிடர்,␢ ‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக்␢ கைம்மாறு உண்டு;␢ மெய்யாகவே பூவுலகில்␢ நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர்␢ இருக்கின்றார்’ என்று சொல்வர்.⁾

Psalm 58 ERV IRV TRV